Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏன் எப்ப பார்த்தாலும் ஷூட்டிங்கிற்கு லேட்டா வருகிறீர்கள்?: சிம்புவை கேட்ட மஞ்சிமா
சென்னை: அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பின்போது சிம்புவை பார்த்து ஏன் எப்ப பார்ததாலும் லேட்டாக வருகிறீர்கள் என மஞ்சிமா மோகன் கேட்டுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளவர் கேரளாவை சேர்ந்த மஞ்சிமா மோகன்.
முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாகிவிட்டார் மஞ்சிமா.
சிம்பு
அச்சம் என்பது மடமையடா படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிப் போனது. இதற்கு சிம்பு சரிவர படப்பிடிப்புக்கு வராததும் காரணம் என்று செய்திகள் வெளியாகின.
மஞ்சிமா
நீங்கள் ஏன் படப்பிடிப்புக்கு லேட்டாகவே வருகிறீர்கள் என்று மஞ்சிமா ஒரு நாள் சிம்புவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், என்னால் ரோபோ மாதிரி இருக்க முடியாது. படப்பிடிப்புக்கு ரெடி என்று தோன்றிய பிறேகே வருவேன் என கூறியுள்ளார்.
வேகம்
சிம்புவின் பதிலை கேட்ட மஞ்சிமா அதில் இருந்து அவர் லேட்டாக வந்தாலும் கேள்வி கேட்கவில்லை. சிம்பு லேட்டாக வந்தாலும் அவர் வேலையை சரியாக செய்து முடித்துவிடுவார் என்கிறார் மஞ்சிமா.
குண்டு
பிரபல இயக்குனர் ஒருவரை சந்திக்க சென்றேன். மிகவும் நம்பிக்கையுடன் சென்ற என்னை பார்த்த அவர் நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என் படத்தில் நடிக்க முடியாது என்று கூறினார் என மஞ்சிமா தெரிவித்தார்.