Don't Miss!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- News சிவகங்கையில் திமுகவையே திகைக்க வைத்த கார்த்தி சிதம்பரம்.. அதிமுகவை முந்தும் பாஜக .. தந்தி டிவி சர்வே
- Sports 49 பந்தில் சுனில் நரைன் சதம்.. 2வது பந்திலேயே கேட்ச்சை கோட்டை விட்ட பராக்..பாய்ந்து பிடித்த ஆவேஷ்
- Lifestyle இந்த படத்தில் முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க உணர்ச்சி ரீதியா எவ்வளவு புத்திசாலி-ன்னு சொல்றோம்...
- Automobiles இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
சந்தோஷமே இல்லை, விஜய்யை பிரிந்ததும் நல்லதுக்கே: அமலா பால்
கொச்சி: திருமண வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்காததால் விஜய்யை பிரிந்ததாக நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
நடிகை அமலா பால் தனது காதல் கணவரான இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்து வாழ்கிறார். இருவரும் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து அமலா கூறுகையில்,
திருமணம்
திருமண வாழ்க்கையில் எனக்கு சந்தோஷம் கிடைக்கவில்லை. அதனால் கணவரை பிரிந்தேன். விஜய்யை பிரிந்தது நன்மைக்கே என்று நினைக்கிறேன்.
விவாகரத்து
சந்தோஷம் இல்லாத திருமண பந்தத்தில் தொடர்ந்து நீடிப்பதில் பலனில்லை. சந்தோஷம் இல்லையா அந்த பந்தத்தில் இருந்து வெளியேற யோசிக்கக் கூடாது. எனக்கு விரைவில் விவாகரத்து கிடைத்துவிடும்.
வேதனை
என் சிறு வயதில் எடுத்த முடிவு திருமணம். விவாகரத்தால் எனக்கு கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டாலும் அதில் இருந்து என் குடும்பத்தார் என்னை மீட்டுவிட்டனர். அவர்களின் ஆதரவு எனக்கு பலமாக உள்ளது.
சினிமா
விவாகரத்தால் எனக்கு பட வாய்ப்புகள் வராமல் இல்லை. நான் 7 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்கிறேன்.
ஹீரோ
படத்தின் ஹீரோ யார் என்று என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கேட்பது இல்லை. கதை என்ன, என் கதாபாத்திரம் என்ன என்று தான் கேட்கிறேன். நான் மாடர்ன் உடை அணிவது பற்றி விமர்சிப்பவர்களை நான் கண்டுகொள்வது இல்லை.