Don't Miss!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
த்ரிஷா ஏன் மாப்பிள்ளை வருணுக்கு 'நோ' சொன்னார் தெரியுமா?
சென்னை: த்ரிஷா தனது வருங்கால கணவர் வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் நடிக்க மறுத்ததன் உண்மை காரணம் தெரிய வந்துள்ளது.
த்ரிஷாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், பட தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. ஆனால் திருமணம் தான் எப்பொழுது என்று தெரியவில்லை. த்ரிஷா படங்களில் பிசியாக இருப்பதால் அடுத்த ஆண்டு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் த்ரிஷா வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது.
த்ரிஷா
த்ரிஷா பல படங்களில் பிசியாக இருப்பதால் வருண் மணியன் ஜெய்யை வைத்து தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியவில்லை என தெரிவித்தார். இதையடுத்து டாப்ஸியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஜெய்
ஜெய் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் ஓடவில்லை. மேலும் அவர் சிங்கிள் ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஓட மாட்டேன் என்கிறதாம். இந்த காரணத்தால் தான் த்ரிஷா ஜெய்யுடன் நடிக்க மறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கிசுகிசு
ஜெய் எந்த படத்தில் நடித்தாலும் அவருக்கும் ஜோடியாக நடிக்கும் நடிகைக்கும் காதல் என்று கிசுகிசு தீயாக பரவிவிடும். இந்நிலையில் அவருடன் நடித்தால் தன் பெயரும் அந்த கிசுகிசு பட்டியலில் சேர்ந்துவிடும் என்று பயந்து தான் நடிக்க மறுத்தாராம் த்ரிஷா.
வருண்
படத்தில் நடிக்க முடியாததற்கான காரணங்களை த்ரிஷா வருண் மணியனிடம் எடுத்துக் கூறினாராம். நிலைமையை புரிந்த கொண்ட அவரும் பரவாயில்லை நாங்கள் வேறு ஹீரோயினை நடிக்க வைக்கிறோம் என்றாராம்.
அப்போ டாப்ஸி கதி?
த்ரிஷா நழுவிக் கொண்டார் பாவம் இந்த டாப்ஸி பொண்ணு தான் சிக்கிக்கிச்சு. அவருக்கும், ஜெய்யுக்கும் இடையே காதல் என்றும் இன்னும் என்ன வதந்தியை எல்லாம் அந்த ஹீரோ பரப்ப உள்ளாரோ என்று கோடம்பாக்கத்தினர் கிசுகிசுக்கிறார்கள்.