Don't Miss!
- Finance பெங்களூரு தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஜல்மித்ரா திட்டம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
மீரா சோப்ரா (எ) நிலாவை ஒதுக்கும் அக்கா பிரியங்கா சோப்ரா?
மும்பை: இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தனது தங்கையான மீரா சோப்ராவிடம் இருந்து தள்ளியே இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அடுத்த சிம்ரன் இவர் தான் என்று எஸ்.ஜே.சூர்யா வடநாட்டில் இருந்து அழைத்து வந்த நடிகை நிலா. எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே பட நாயகி இந்த நிலா தான். அவர் தென்னிந்திய படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் குர்காவ்னில் 28 வயது பெண் தூக்கில் பிணமாகத் தொங்கிய வழக்கில் நிலாவின் பெயர் அடிபட்டது. அந்த பெண்ணின் கணவருக்கு நிலாவுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் தான் அவரை தூக்கில் தொங்கவிட்டதாக இறந்த பெண்ணின் சகோதரி தெரிவித்தார்.
இந்நிலையில் நிலா தனது பெயரை இயற்பெயரான மீரா சோப்ரா என்றே மாற்றிவிட்டு பாலிவுட்டில் நுழைந்துவிட்டார்.
வம்பே வேண்டாம்
கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கி பெயரைக் கெடுத்துக் கொண்டதால் மீராவிடம் இருந்து அவரது அக்காவும், நடிகையுமான பிரியங்கா சோப்ரா மற்றும் தங்கை பரினீத்தி சோப்ரா ஆகியோர் தள்ளியே உள்ளனராம்.
பரினீத்தி
மீரா எனக்கு தூரத்து சொந்தம். நாங்கள் பார்த்துக் கொள்வதோ, பேசுவதோ இல்லை என்று நடிகை பரினீத்தி சோப்ரா தெரிவித்துள்ளார்.
பரினீத்தி, பார்பி
பிரியங்கா சோப்ரா தனது தங்கைகளில் பரினீத்தி மற்றும் பார்பி ஹன்டாவுக்கு மட்டும் உதவி செய்வதாகவும், மீராவை கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
தங்கைகள்
பாலிவுட்டில் எனது தங்களான மீரா மற்றும் பரினீத்தியை நான் பாதுகாப்பேன் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.