Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராதாரவி இவ்வளவு பேசியும் நயன்தாரா ஏன் கூலாக இருக்கிறார் தெரியுமா?
Recommended Video
சென்னை: ராதாரவி விவகாரத்தில் நயன்தாரா நிதானத்துடன் செயல்படுவதற்கு காரணம் உள்ளது.
கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராதாரவி நயன்தாராவை பற்றி கேவலமாக பேசினார். அதற்கு நடிகைகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நயன்தாராவுக்கு பதில் அவரின் காதலர் விக்னேஷ் சிவன் கொந்தளித்து ட்வீட் செய்துள்ளார்.
ராதாரவி, எஸ்.வி. சேகர்: ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த நயன்தாரா
நயன்தாரா
நயன்தாரா நிதானத்துடன் செயல்படுகிறார். ராதாரவியை கண்டித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதே சமயம் ராதாரவி அளவுக்கு அவர் இறங்கி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகம்
திரையுலகில் இத்தனை ஆண்டுகளாக உள்ள நயன்தாரா ராதாரவி போன்று பலரை பார்த்திருப்பார். எத்தனையோ பேர் அவர் காதுபடவே கேவலமாக பேசியிருப்பார்கள். அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான் இந்த உயரத்திற்கு வந்துள்ளார். இதை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
|
வீடியோ
நம்மை பற்றி யார் என்ன நினைப்பார்கள், பேசுவார்கள் என்று கவலைப்பட்டால் நம் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது என்று நயன்தாரா தெரிவித்த வீடியோவை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
ராதாரவி
நயன்தாராவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ராதாரவியை எல்லாம் திருத்தவே முடியாது. அவர் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பலரும் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்து வருகிறார்கள்.