Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாளுக்கு நாள் நயன்தாராவுக்கு மவுசு அதிகரிப்பது ஏன் தெரியுமா?
சென்னை: நயன்தாராவுக்கு ஏன் இவ்வளவு மவுசு உள்ளது என்பது குறித்து ஹரிஷ் உத்தமன் தெரிவித்துள்ளார்.
தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் டோரா. இதற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. படம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது.
கதை நயன்தாராவை சுற்றி தான் நகர்கிறது.
நயன்தாரா
நயன்தாராவுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனியர்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை அனைவரும் அவருடன் பணியாற்ற விரும்புகிறார்கள்.
ஹரிஷ் உத்தமன்
நயன்தாரா தனது காட்சியை முடித்த கையோடு கேரவனுக்கு சென்று ஓய்வு எடுக்க மாட்டார். செட்டில் இருந்து பிறரின் காட்சிகள் படமாக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பார் என்கிறார் டோரா படத்தில் அவருடன் நடித்த ஹரிஷ் உத்தமன்.
பொறுமை
படப்பிடிப்பு தாமதமானால் நயன்தாரா கோபப்பட மாட்டார். மாறாக பொறுமையாக காத்திருப்பார். மேலும் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதை பழக்கமாக வைத்துள்ளார். இதனால் தான் நயன்தாராவை அனைவரும் புகழ்கிறார்கள் என்கிறார் ஹரிஷ்.
தாஸ்
பெரிய நடிகை என்ற பந்தா இல்லாமல் காட்சிகளை சொன்னபடி நடித்துக் கொடுத்தார் நயன்தாரா என்று டோரா இயக்குனர் தாஸ் ராமசாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.