Don't Miss!
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- News நாளை லோக்சபா தேர்தல்.. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாளுக்கு நாள் நயன்தாராவுக்கு மவுசு அதிகரிப்பது ஏன் தெரியுமா?
சென்னை: நயன்தாராவுக்கு ஏன் இவ்வளவு மவுசு உள்ளது என்பது குறித்து ஹரிஷ் உத்தமன் தெரிவித்துள்ளார்.
தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் டோரா. இதற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. படம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது.
கதை நயன்தாராவை சுற்றி தான் நகர்கிறது.
நயன்தாரா
நயன்தாராவுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனியர்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை அனைவரும் அவருடன் பணியாற்ற விரும்புகிறார்கள்.
ஹரிஷ் உத்தமன்
நயன்தாரா தனது காட்சியை முடித்த கையோடு கேரவனுக்கு சென்று ஓய்வு எடுக்க மாட்டார். செட்டில் இருந்து பிறரின் காட்சிகள் படமாக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பார் என்கிறார் டோரா படத்தில் அவருடன் நடித்த ஹரிஷ் உத்தமன்.
பொறுமை
படப்பிடிப்பு தாமதமானால் நயன்தாரா கோபப்பட மாட்டார். மாறாக பொறுமையாக காத்திருப்பார். மேலும் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதை பழக்கமாக வைத்துள்ளார். இதனால் தான் நயன்தாராவை அனைவரும் புகழ்கிறார்கள் என்கிறார் ஹரிஷ்.
தாஸ்
பெரிய நடிகை என்ற பந்தா இல்லாமல் காட்சிகளை சொன்னபடி நடித்துக் கொடுத்தார் நயன்தாரா என்று டோரா இயக்குனர் தாஸ் ராமசாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.