Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அருள்நிதிய நினைச்சு ஆரம்பத்துல பயந்தேன்- பள பளப்பா திரும்பியிருக்கும் பூர்ணா பேச்சு
அருள்நிதியை நினைத்து ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. ஆனா பழகின பிறகுதான் அவர் குழந்தை மனசுக்காரர்னு புரிஞ்சது, என்றார் நடிகை பூர்ணா.
மவுன குரு படத்துக்குப் பிறகு அருள்நிதி - பூர்ணா நடிக்கும் படம் தகராறு. ரொம்ப நாளைக்குப் பிறகு இந்தப் படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட பூர்ணா பேசுகையில், "இதுவரை நான் நடித்த படங்களிலேயே இதுதான் பெரிய பட்ஜெட், பெரிய கம்பெனி படம்.
இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க முக்கிய காரணம் நடிகை பூஜா. அவங்க நடிக்க வேண்டிய ரோல். அவங்க நடிக்க முடியாததால என்னை பரிந்துரைத்தார். அவருக்கு நான் சொல்லியாக வேண்டும்.
ஹிட் படத்தில நடிக்கலையேன்னு என்னைப் பார்க்கும் ரிப்போர்ட்டர்ஸ் கேட்பாங்க. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் இந்தப் படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு அருமையான வேடம்.
இந்தப் படத்தோட ஷூட்டிங்குக்கு முதல்நாள் வந்தபோது எனக்கு கொஞ்சம் பதட்டமாத்தான் இருந்துச்சி. காரணம் ஹீரோ அருள்நிதி. பெரிய குடும்பத்திலிருந்து வந்திருப்பவர். அதையெல்லாம் நினைத்து பயப்பட்டேன். ஆனால் அவருடன் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் அவர் எந்த அளவு குழந்தை மனசுக்காரர்னு புரிஞ்சிக்கிட்டேன்.
இந்தப் படத்துல என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் ஒரு சிரிப்பு சிரிப்பார்.. அது அவ்வளவு க்யூட்டா இருக்கும்.. தயவு செஞ்சி அதை நீங்க பார்க்கணும்," என்றார்.