Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
ஆயிரம் இருந்தாலும் அவர் என் கணவராச்சே.. எத்தனை நாள் ஓடி ஒளிவார்? - ராதா
சென்னை: ஆயிரம் இருந்தாலும் பைசூல் என் கணவர்... அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார்... அதான் வழக்கை வாபஸ் பெற்றேன், என்றார் நடிகை ராதா.
பைசூல் மீது செக்ஸ் மோசடி மற்றும் பண மோசடி புகார்களைக் கூறி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்கள் கொடுத்தார் சுந்தரா டிராவல்ஸ் ஹீரோயின் ராதா.
ஆனால் நேற்று இரவு திடீரென தனது புகார்கள் அனைத்தையும் வாபஸ் பெற்றார். போலீசார் இதனை ஏற்க மறுத்து, புதிய கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து நடிகை ராதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "பைசூல் எனது கணவர்தானே! ஒரு வேகத்தில் புகார் கொடுத்துவிட்டேன்.
ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் வரவில்லை. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். என்ன நடந்தாலும் பரவாயில்லை," என்றார்.
உங்களுக்குள் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொண்டீர்களா.. அல்லது ஏதாவது மிரட்டல் வந்ததா என்று கேட்டபோது, பதில் கூற மறுத்து போனையும் சுவிட்ச் ஆப் செய்தார்.