Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆயிரம் இருந்தாலும் அவர் என் கணவராச்சே.. எத்தனை நாள் ஓடி ஒளிவார்? - ராதா
சென்னை: ஆயிரம் இருந்தாலும் பைசூல் என் கணவர்... அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார்... அதான் வழக்கை வாபஸ் பெற்றேன், என்றார் நடிகை ராதா.
பைசூல் மீது செக்ஸ் மோசடி மற்றும் பண மோசடி புகார்களைக் கூறி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்கள் கொடுத்தார் சுந்தரா டிராவல்ஸ் ஹீரோயின் ராதா.
ஆனால் நேற்று இரவு திடீரென தனது புகார்கள் அனைத்தையும் வாபஸ் பெற்றார். போலீசார் இதனை ஏற்க மறுத்து, புதிய கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து நடிகை ராதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "பைசூல் எனது கணவர்தானே! ஒரு வேகத்தில் புகார் கொடுத்துவிட்டேன்.
ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் வரவில்லை. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். என்ன நடந்தாலும் பரவாயில்லை," என்றார்.
உங்களுக்குள் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொண்டீர்களா.. அல்லது ஏதாவது மிரட்டல் வந்ததா என்று கேட்டபோது, பதில் கூற மறுத்து போனையும் சுவிட்ச் ஆப் செய்தார்.