Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஆயிரம் இருந்தாலும் அவர் என் கணவராச்சே.. எத்தனை நாள் ஓடி ஒளிவார்? - ராதா
சென்னை: ஆயிரம் இருந்தாலும் பைசூல் என் கணவர்... அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார்... அதான் வழக்கை வாபஸ் பெற்றேன், என்றார் நடிகை ராதா.
பைசூல் மீது செக்ஸ் மோசடி மற்றும் பண மோசடி புகார்களைக் கூறி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்கள் கொடுத்தார் சுந்தரா டிராவல்ஸ் ஹீரோயின் ராதா.
ஆனால் நேற்று இரவு திடீரென தனது புகார்கள் அனைத்தையும் வாபஸ் பெற்றார். போலீசார் இதனை ஏற்க மறுத்து, புதிய கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து நடிகை ராதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "பைசூல் எனது கணவர்தானே! ஒரு வேகத்தில் புகார் கொடுத்துவிட்டேன்.
ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் வரவில்லை. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். என்ன நடந்தாலும் பரவாயில்லை," என்றார்.
உங்களுக்குள் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொண்டீர்களா.. அல்லது ஏதாவது மிரட்டல் வந்ததா என்று கேட்டபோது, பதில் கூற மறுத்து போனையும் சுவிட்ச் ஆப் செய்தார்.