Don't Miss!
- Automobiles குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- Sports எவ்வளவு ரன் அடித்தால் என்ன.. எனக்கு அதுதான் முக்கியம்.. சத்தமில்லாமல் கவனம் ஈர்த்த சந்தீப் வாரியர்!
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
காதலருடன் பாண்டிச்சேரியில் அமலா பால்... "நான் யாருடன் இருந்தா உங்களுக்கு என்ன?"... நிருபரிடம் கோபம்!
அமலா பால் தனது காதலருடன் பாண்டிச்சேரியில் குடியேறியிருப்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
சென்னை: தான் காதலிப்பதை ஒப்புக் கொண்டுள்ள நடிகை அமலாபால், தன்னுடைய காதலர் பற்றிய விபரஙகளை மட்டும் தெரிவிக்க மறுத்துள்ளார்.
ஆடையில்லாமல் அமலா பால் நடித்துள்ள ஆடை திரைப்படம் 19ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் அவர்.
ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரிடம் ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுப்பதில்லை என அமலா தெரிவித்திருந்தார்.
மீண்டும் காதல்
அமலா பால் மீண்டும் காதலில் விழுந்துள்ளது தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். தான் யாரை காதலிக்கிறேன் என அமலா பால் தெரியப்படுத்தாத நிலையில், அது யாராக இருக்கும் என பூதக்கண்ணாடி வைத்து தேடி வருகிறார்கள் ரசிகர்கள்.
பாண்டிச்சேரியில் குடியேற்றம்
இந்நிலையில் அமலா பால் தனது காதலருடன் பாண்டிச்சேரியில் குடியேறியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அதனை உறுதி செய்திருக்கிறார் அவர். ஆனால் தான் யாருடன் அங்கு வசிக்கிறேன் என்பதை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார்.
பாண்டிச்சேரி எதற்காக?
அந்த பேட்டியில் அவர், "அரவிந்தர் ஆசிரமத்துக்கு போவதற்காக முன்பு பாண்டிச்சேரிக்கு அவ்வப்போது செல்வது வழக்கம். பிறகு இந்த ஊர் தான் நான் இருக்க வேண்டிய இடம் என தீர்மானித்து இங்கேயே குடியேறிவிட்டேன். படப்பிடிப்பு நாட்களில் மட்டும் சென்னைக்கு வருவேன். பின்னர் பாண்டிச்சேரிக்கு சென்றுவிடுவேன். விடுமுறை நாட்களில் எப்போதாவது கேரளா சென்று வருவேன்", எனக் கூறியுள்ளார்.
ஆவேச பதில்
பாண்டிச்சேரியில் தனியாகவா இருக்குறீர்கள்? அல்லது வேறு யாரும் உங்களுடன் இருக்கிறார்களா? என கேட்டதற்கு "நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும், வேறு யாருடன் இருந்தாலும், அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என அமலா பால் ஆவேசமாக பதில் அளித்தார்.
ஆதங்கமா? பப்ளிசிட்டியா?
அமலா பாலின் முன்னாள் கணவரான இயக்குனர் விஜய்க்கு சமீபத்தில் தான் 2வது திருமணம் நடந்தது. இந்த நிலையில் தானும் காதலில் இருப்பதை அமலா பால் வெளிப்படுத்தி இருக்கிறார். இது விஜய்க்கு திருமணம் நடந்துவிட்டதால் வெளிப்படுத்திய தகவலா இல்லை ஆடை பட புரொமோஷனுக்காக பரபரப்பை கிளப்ப இப்படி கூறியிருக்கிறாரா என்பது அமலா பாலுக்கே வெளிச்சம்.