Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
நடிகை ரீமா கல்லிங்கலுக்கு தடை வருமா?
சமீபத்தில்தான் தயாரிப்பாளரை சந்திக்க மறுத்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கு நடிக்கத் தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம். இதனால் எழுந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு நடிகைக்கு சிக்கல் எழுந்துள்ளது.
மலையாளத்திலும், தமிழிலும் நடித்து வருபவர் ரீமா கல்லிங்கல். தமிழில் யுவன் யுவதி படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் நீலத்தாமரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சிபி மலயில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்க ரீமா வரவில்லை என்று தெரிகிறது. மாறாக வேறு ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு அவர் போய் விட்டாராம்.
இதையடுத்து இயக்குநர் சிபி மலயில், மலையாள நடிகர்சங்கம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ரீமாவுக்கு நடிக்கத் தடை விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீப காலமாகவே தென்னிந்திய நடிகைகள் பலரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். கன்னடத்தில் நடிகை நிகிதாவுக்கு தடை விதித்து பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் அதை வாபஸ் பெற்றனர். மலையாளத்தில் நடிகைகள் நித்யா மேனன், ரீமாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழிலும் கூட சோனாவால் பிரச்சினை எழுந்து அடங்கியது என்பது நினைவிருக்கலாம்.