Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன்.. அமலா பால் உருக்கம்!
சென்னை: கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன் என நடிகை அமலா பால் உருக்கமாக கூறியுள்ளார்.
நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பணப் பிரச்சனையால் படம் ரிலீஸாவதில் சிக்கல் இருந்தது.
அந்தப் பிரச்சனையை தீர்த்து படம் வெளியாக உதவியாக இருந்தார் நடிகை அமலா பால். இந்த படத்தில் நடிகை அமலா பால் நிர்வாண கோலத்தில் நடித்திருந்ததால் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியிருந்த சில படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிராக ஆடை படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கேசிஜி வர்கீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அமலா பால் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமலா பால் மண், மொழி, மக்கள் இவற்றிலிருந்துதான் தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும் தனது கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன் என்றும் அவர் கூறினார்.