twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெளியில் செல்லும் பெண்களே... பாதுகாப்பிற்கு ‘கத்தி’ வைத்திருங்கள்: இது ஷில்பா அறிவுரை

    |

    மும்பை: பெண்கள் சுய பாதுகாப்புக்காக வெளியில் போகும்போது கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று அதிரடியாக பேசியுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

    ஆபத்து சமயங்களில் கத்தி நமக்கு நல்ல ஆயுதமாக பயன்படும் என்றும் ஷில்பா கூறுகிறார்.

    பாலியல் தொல்லைகள், பாலியல் பலாத்கார முயற்சிகளின்போது கத்தியின் துணை பெரும் உதவியாக இருக்கும் என்பதும் ஷில்பாவின் கருத்தாகும்.

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்....,

    மனநிலை பிறண்டவர்கள்....

    மனநிலை பிறண்டவர்கள்....

    மன நிலை பிறண்டவர்கள்தான் இதுபோன்ற பாலியல் விஷமச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க காவல்துறையினர் முடிந்தவரை பாடுபடுகிறார்கள். ஆனால் எவ்வளவு தூரம் அவர்களால் நம்மை காத்துக் கொண்டிருக்க முடியும்...?

    பாதுகாப்புக்கு கத்தி....

    பாதுகாப்புக்கு கத்தி....

    பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக சுயமான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும். ஆபத்தான நேரங்களில் இடங்களில் இருக்கும்போது கூடவே கத்தியை வைத்துக் கொள்வது நல்லது.

    விரக்தியில் ஷில்பா....

    விரக்தியில் ஷில்பா....

    அடிக்கடி தற்போது பெண்கள் பாலியல் ரீதியாக தாக்கப்படுகிறார்கள். இது என்னை விரக்தி அடைய வைக்கிறது. சில நேரங்களில் என்ன மாதிரியான சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்ற வெறுப்புணர்வும் வருகிறது.

    பொதுமக்களுக்கும் பொறுப்பு வேணும்....

    பொதுமக்களுக்கும் பொறுப்பு வேணும்....

    போலீஸார் மிகவும் பொறுப்புடன் இதில் நடக்கிறார்கள். அவர்களை நாம் பாராட்ட வேண்டும். அதேசமயம், பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் ஷில்பா.

    English summary
    Urging women to become "self-reliant", Bollywood actress Shilpa Shetty on Saturday recommended them to carry a knife to protect themselves from molesters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X