செம க்யூட்.. கிளிப், ரிப்பன்லாம் போட்டு.. யாஷிகா கிட்ட சிக்கித் தவிக்கும் செல்ல நாய்க்குட்டி!
சென்னை: கவர்ச்சி புகைப்படங்களுக்கு நடுவே தனது செல்ல நாய்க்குட்டியை சீவி சிங்காரிச்சு யாஷிகா போட்டு இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மனங்களை கவர்ந்திருக்கிறது.
Recommended Video
டில்லியில் கடந்த 1999ம் ஆண்டு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் யாஷிகா ஆனந்த்.
கடந்த 2016ம் ஆண்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சந்தானத்துடன்
2015ம் ஆண்டு சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான இனிமே இப்படித்தான் படத்திலேயே யாஷிகா ஆனந்த் அறிமுகமாக வேண்டியது. அந்த படத்தில் சில நாட்கள் நடித்த யாஷிகா ஆனந்த், தொடர்ந்து நடிக்க முடியாத சூழலில் யாஷிகா ஆனந்த் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

கவலை வேண்டாம்
துருவங்கள் பதினாறு படத்தில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள பயிற்சியாளராக ஒரே ஒரு காட்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் முதன்முறையாக திரையில் தோன்றியிருப்பார். அந்த படத்திற்கு பிறகு தான் அவருக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் குவிந்தன.

மக்கள் மத்தியில்
துருவங்கள் பதினாறு படத்தில் நடித்திருந்த போதிலும், யாஷிகா ஆனந்த், வெகுவாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உதவிய படம் என்றால் அது இருட்டறையில் முரட்டு குத்து படம் தான். கடந்த இன்ஸ்டா பதிவில் கூட அந்த படத்தில் தான் அறிமுகமாகும் செம ஹாட்டான காட்சியை ரசிகர்களுக்கு பகிர்ந்து வைரலாக்கி உள்ளார்.

செம ஹாட்டாக
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் குட்டி டிரெஸ் அணிந்து கொண்டு தொடையழகு தெரிய செம ஹாட்டாக வலம் வந்து தமிழக ரசிகர்கள் மத்தியில் கிளாமர் குயினாக அறியப்பட்டார்.

தாராள மனசு
15 வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வரும் யாஷிகா ஆனந்துக்கு தற்போது வெறும் 20 வயது தான் ஆகிறது. ஆனால், தொடர்ந்து திரைப்படங்களிலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தாராளமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். முன்னழகு தெரியும் படி எடுப்பான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களின் இதய துடிப்பை அதிகரித்து வருவதில் யாஷிகா கில்லாடி.

செல்ல இம்சை
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த், தனது செல்ல நாய்க்குட்டியை சீவி சிங்காரித்து கிளிப் மற்றும் ரிப்பன் அணிவித்து செல்ல இம்சை கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஆனால், காருக்குள் இருவரும் இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் லாக்டவுனில் எங்கே சுத்துறீங்க என கேட்டு வருகின்றனர்.

வெயிட்டான போட்டோ
காலையில் இப்படி நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் போட்டோவை போட்டு ஏமாத்தாதீங்க, சன் டே வேற, நல்லா செம ஹாட்டா இருக்கும் புகைப்படங்களை உங்களையே நம்பியிருக்கும் ரசிகர்களுக்காக சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க என ஜொள்ளு ரசிகர்களின் கோரிக்கைகளும் கமெண்ட் செக்ஷனில் காண முடிகிறது.


Click it and Unblock the Notifications











