தேவதையா.. ராட்சசியா.. அடுத்தடுத்து ஹாட் புகைப்படங்களை இறக்கி இளைஞர்களை கிறங்கடிக்க வைக்கும் யாஷுமா!
சென்னை: நடிப்பை விட மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
தற்போது றெக்க வைத்து வெள்ளை நிற கவுனில் தேவதையாக ஒரு போட்டோவையும், கருப்பு நிறத்தில் டெவில் லுக்கில் ராட்சசியாக ஒரு போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
யாஷிகா ஆனந்தின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

தாராள நடிகை
துருவங்கள் பதினாறு படத்தில் அறிமுகமான யாஷிகா ஆனந்தை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர் தாராளமாக நடித்த இருட்டறையில் முரட்டு குத்து படம் அவரை பிக்பாஸ் வீடு வரை கொண்டு சேர்த்தது. பிக்பாஸ் வீட்டில் குட்டி டிரெஸ் போட்டுக் கொண்டு திரிந்து பல ஜொள்ளுவிடும் ரசிகர்களை தனது ஃபேனாக மாற்றிக் கொண்டார்.

ஜாம்பிக்கு விருது
சமீபத்தில் ஜாம்பி படத்துக்கு சிறந்த நடிகை விருது வாங்கியதாக நடிகை யாஷிகா ஆனந்த் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த பலரும் குபீரென சிரித்து அவரை பங்கமாக கலாய்த்தனர். அந்த மொக்கை படத்துக்கெல்லாம் அவார்டா என ரசிகர்கள் நேரடியாகவே கேள்விகளை எழுப்பி கிண்டல் செய்தனர். ஜாம்பி படத்தில் யாஷிகா ஆனந்த் மட்டுமே ஆறுதலான விஷயம் என்பது வேறு கதை.
Recommended Video
ஏஞ்சல்
காதல் கொண்டேன் படத்தில் வரும் தேவதையை கண்டேன் பாடலை தற்போது இளைஞர்கள் யாஷிகா ஆனந்தை பார்த்து பாடி வருகின்றனர். சிறகுகள் யார் கொடுத்தது என்ற பாடலும் அவரது இந்த புதிய போட்டோஷுட் புகைப்படத்திற்கு ஆப்ட்டாகவே இருக்கும். யாஷிகா ஆனந்த், நடிப்பை தாண்டி மாடலிங் உலகில் கலக்கி வருகிறார்.

டெவில்
வெள்ளை நிற உடையில் தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஹாட்டாகவும் க்யூட்டாகவும் போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளிய யாஷிகா தற்போது அடுத்ததாக பிளாக் டிரெஸ்சில் டெவில் லுக்கில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

செம்மையா இருக்க
மேலும், இந்த கருப்பு நிற உடையில் ராட்சசி போல இருக்கும் புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ளதை பார்த்த இன்ஸ்டாகிராம் ரசிகர்கள், செம்மையா இருக்க டியர் என்றும், ஐ லவ் யூ என்றும், சோ க்யூட் என்றும் சோ ஹாட் என்றும் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். சில ரசிகர்கள் யாஷிகா ஆனந்தின் இந்த போஸுக்கு கவிதையும் எழுதி வருகின்றனர்.

ராஜபீமா
துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு காத்திருக்கும் படம் ராஜபீமா. யானை தந்தங்களை கடத்தும் சப்ஜெக்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஆரவ் நடித்துள்ளார். ஓவியா மற்றும் யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











