அதாச்சு ஒரு வருஷம்: அசால்டா சொல்லும் ஸ்ருதி ஹரிஹரன்
Recommended Video

பெங்களூர்: தனக்கு திருமணமாகிவிட்டதை ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்.
நிபுணன் படத்தில் நடித்தபோது அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீசில் புகார் தெரிவித்தார் ஸ்ருதி ஹரிஹரன். காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு மூலம் தான் ஸ்ருதிக்கு திருமணமானது தெரிய வந்தது.
இந்நிலையில் தனது திருமணம் பற்றி அவர் கூறியிருப்பதாவது,

திருமணம்
நான் நீண்ட காலமாக காதலிக்கிறேன். ஓராண்டுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்தால் என் தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். ஆனால் அதனால் என் கெரியர் பாதிக்கப்படவில்லை.

பட வாய்ப்பு
ஸ்ருதிக்கு திருமணமாகிவிட்டதாம் என்று கூறி திரையுலகினர் என்னை ஒதுக்கவில்லை. ஒரு நடிகை சிங்கிளாகத் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மாறியுள்ளதில் மகிழ்ச்சி. சிங்கிளாக இருப்பதும், திருமணம் செய்வதும் அவரவர் விருப்பம்.

விளாசல்
மீ டூ புகார் தெரிவித்த பிறகு என்னை பலரும் விளாசினார்கள். தற்போது கூட சமூக வலைதளங்களில் என்னை கடுமையாக விமர்சிக்கிறார்கள். சிலர் என்னை மிகவும் கேவலமாக விமர்சிக்கிறார்கள். ஆனால் நான் அதை கண்டுகொள்வது இல்லை என்கிறார் ஸ்ருதி.

ராம் குமார்
திருமணமாகிவிட்டது என்பதை தெரிவித்த ஸ்ருதி கணவரின் பெயரை மட்டும் தெரிவிக்கவில்லை. ஆனால் அர்ஜுன் மீது அளித்த புகார் மனுவில் கணவரின் பெயர் ராம் குமார் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதி தன் கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டு காதல் பற்றி பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











