ஏஞ்செலீனா ஜூலியுடன் இணைந்து நடிக்க மாஜி கணவர் விருப்பம்

தார்ன்டனும், ஜூலியும் 2000மாவது ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து மகன் மடாக்ஸை தத்தெடுத்தனர். 2003ம் ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டனர்.
அதன் பின்னர் ஜூலி, பிராட் பிட் மீது காதல் கொண்டார். இருவரும் தம்பதிகளாயினர். இந்தத் தம்பதிக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.
மனைவியை விட்டுப் பிரிந்து விட்டாலும் கூட ஜூலியுடன் தனக்கு நல்ல உறவு உள்ளதாக தார்ன்டன் கூறியுள்ளார். மீண்டும் இணைந்து நடிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தார்ன்டன் கூறுகையில், ஜூலியுன் இணைந்து எதிர்காலத்தில் நடிப்பேன் என நம்புகிறேன். முன்பு போலவே இருவரும் சகஜமாக பேசிக் கொள்கிறோம்.
இருவரும் இணைந்து செயல்படும் நாளை எதிர்நோக்கியுள்ளேன். சரியான நேரத்தில் அது நடைபெறும் என்கிறார் தார்ன்டன்.
தார்ன்டன், ஜூலிக்கு முதல் கணவர் அல்ல. அவரது முதல் கணவரது பெயர் ஜானி லீ மில்லர். அவர் இங்கிலாந்து நடிகர். இருவரும் 1999ம் ஆண்டு மணந்து கொண்டனர். ஆனால் ஒரே ஆண்டில் பிரிந்து விட்டனர். பின்னர் வந்து சேர்ந்தவர்தான் பில்லி பாப் தார்ன்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா...


Click it and Unblock the Notifications











