twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இருப்பதே போதும்... இப்போதைக்கு குழந்தை வேண்டாம்! - ஏஞ்சலினா ஜூலி

    By Chakra
    |

    Angelina Jolie
    லண்டன்: இருக்கும் 6 குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கே நேரம் போதவில்லை அதனால் தற்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தெரிவித்துள்ளார்.

    ஏஞ்சலினாவுக்கும், பிராட் பிட்டுக்கும் இரட்டையர்கள் உள்பட 3 குழந்தைகளும், 3 வளர்ப்பு குழந்தைகளும் உள்ளனர். இவர்களை பார்த்துக் கொள்வதற்கே இருவருக்கும் நேரம் சரியாக இருக்கிறதாம். அதனால் இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார் ஜூலி.

    இது குறித்து 35 வயதாகும் நடிகை ஏஞ்சலினா ஜூலி கூறுகையில், "எங்கள் 6 குழந்தைகளுக்கும் தனித்தனியே முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறோம். அதனால் இன்னொரு குழந்தை என்ற பேச்சுக்கே தற்போது இடமில்லை.

    ஒவ்வொரு குழந்தையும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கும். அதனால் அவர்களுடன் நேரம் செலவிடுவது அவசியாகும். பிராட் பிட்டும், நானும் அவர்களை கண்ணும், கருத்துமாக கவனித்து வருகிறோம்", என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X