விவாகரத்து வழக்கு தொடர்ந்தார் அர்னால்ட் மனைவி!

காரணம்... பணிப்பெண்ணுடன் வைத்துக் கொண்ட கள்ள உறவும், அந்த உறவுக்கு சாட்சியாக பிறந்த குழந்தையும்.
அர்னால்ட் மனைவி மரியா ஷ்ரிவர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அர்னால்டுக்கு வீட்டு வேலைக்கார பெண்ணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் ஒரு குழந்தை பிறந்தது.
இந்த விஷயத்தை அர்னால்டே ஒப்புக் கொண்டு மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்தார். ஆனால் அவரது மனைவி மரியா ஷ்ரிவரால் அதை ஏற்க முடியவில்லை.
அர்னால்டை கைவிட்டு தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்வது எனமுடிவெடுத்தார். இதன் மூலம் அவர்களது 25 வருட தாம்பத்திய வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
தற்போது தனது குழந்தைகளுடன் வாழும் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனது 17 வயது மற்றும் 13 வயது குழந்தைகளை தனது பாதுகாப்பில் வைத்து கொள்ள அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் அர்னால்டு சொத்து குறித்தும், திருமணத்தின் போது அவர்களுக்கு இடையே போடப்பட்டிருந்த ஒப்பந்தம் குறித்தும் தெரிவிக்கப் படவில்லை. விவாகரத்து வழங்கப்படும் தருவாயில் கடந்த 1986-ம் ஆண்டு முதல் அர்னால்டு சம்பாதித்த சொத்துக்களில் சரிபாதி மரியா ஷ்ரிவருக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











