Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விவாகரத்து வழக்கு தொடர்ந்தார் அர்னால்ட் மனைவி!
காரணம்... பணிப்பெண்ணுடன் வைத்துக் கொண்ட கள்ள உறவும், அந்த உறவுக்கு சாட்சியாக பிறந்த குழந்தையும்.
அர்னால்ட் மனைவி மரியா ஷ்ரிவர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அர்னால்டுக்கு வீட்டு வேலைக்கார பெண்ணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் ஒரு குழந்தை பிறந்தது.
இந்த விஷயத்தை அர்னால்டே ஒப்புக் கொண்டு மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்தார். ஆனால் அவரது மனைவி மரியா ஷ்ரிவரால் அதை ஏற்க முடியவில்லை.
அர்னால்டை கைவிட்டு தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்வது எனமுடிவெடுத்தார். இதன் மூலம் அவர்களது 25 வருட தாம்பத்திய வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
தற்போது தனது குழந்தைகளுடன் வாழும் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனது 17 வயது மற்றும் 13 வயது குழந்தைகளை தனது பாதுகாப்பில் வைத்து கொள்ள அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் அர்னால்டு சொத்து குறித்தும், திருமணத்தின் போது அவர்களுக்கு இடையே போடப்பட்டிருந்த ஒப்பந்தம் குறித்தும் தெரிவிக்கப் படவில்லை. விவாகரத்து வழங்கப்படும் தருவாயில் கடந்த 1986-ம் ஆண்டு முதல் அர்னால்டு சம்பாதித்த சொத்துக்களில் சரிபாதி மரியா ஷ்ரிவருக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.