குழந்தைகளின் ஆயாவுடன் ஜாக்சன் காதல்!

லண்டன்: தனது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக வந்த உகாண்டாவைச் சேர்ந்த செவிலிப் பெண்ணுடன் மைக்கேல் ஜாக்சன் தனது வாழ்நாளின் கடைசி நாட்களில் ரகசியக் காதல் புரிந்து வந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இதை ஜாக்சனின் தனிப்பட்ட புகைப்படக்காரரான இயான் பார்க்லி கூறியுள்ளார்.
இதுகுறித்து பார்க்லி கூறுகையில், உகாண்டாவைச் சேர்ந்தவர் கிரேஸ் ருவாரம்பா. இவர் ஜாக்சனின் குழந்தைகளான பிரின்ஸ மைக்கேல், பாரிஸ் காத்தரீன், பிரின்ஸ் மைக்கேல்-2 ஆகியோரைப் பார்த்துக் கொள்வதற்காக ஜாக்சனின் இல்லத்தில் தங்கியிருந்தார்.
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது ஜாக்சன் வீட்டில் பணியாற்றிய அனைவருக்கும் நன்கு தெரியுமாம்.
கிரேஸும், ஜாக்சனும் ஒருவரை ஒருவர் விரும்பினர். குழந்தைகளுக்கும் ருவாரம்பாவைப் பிடிக்கும். அவரை அம்மா என்றுதான் அவர்கள் அழைப்பார்கள் என்று கூறியுள்ளார் பார்க்லி.
ஜாக்சனின் தலைமைப் பாதுகாவலராக முன்பு வேலை பார்த்த மாட் பிட்ஸ் கூட சமீபத்தில் இதை மறைமுகமாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜாக்சனுக்கு ரகசியக் காதலி ஒருவர் இருந்தார். இருந்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு அவர் பிரபலமானவர் இல்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் அவர் கிரேஸ்தான் என்று இன்னொரு பாதுகாவலர் கூறியிருந்தார். இருவரும் முதலாளி, தொழிலாளி போல பழகவில்லை. கல்யாணமான தம்பதி போலத்தான் காணப்பட்டனர் என்று கூறியிருந்தார் அந்தப் பாதுகாவலர்.
தற்போது இது உண்மைதான் என்பதை தெளிவாக்கியுள்ளது பார்க்லியின் பேட்டி.


Click it and Unblock the Notifications











