ரூ. 220 கோடி கேட்டு மைக்கேல் ஜாக்சன் மீது வழக்கு

By Staff

Michael Jackson with Raymone Bain
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் தனக்கு ரூ. 220 கோடி தர வேண்டி இருப்பதாகவும், அதை பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்து ரெய்மோன் பெய்ன் என்ற பெண் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாப் உலகி்ன் மூடிசூடா மன்னராக இருந்தவர் மைக்கேல் ஜாக்சன். பாப் ஆல்பம் மூலம் கோடி கணக்கில் சொத்து சேர்த்தார். ஆனால் அவற்றை பத்திரமாக காக்க தவறிவிட்டார்.

தற்போது 50 வயதான இவர் மீண்டும் ஒரு இன்னிங்ஸ் வந்து மக்களை இசையால் மிரட்ட தாயராக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். இங்கிலாந்தின் பிரபல ஓ2 அரங்கில் விரைவில் பாப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவருடைய செய்தி தொடர்பாளராக இருந்த ரெய்மோன் பெய்ன் என்ற பெண் அவர் மீது வாஷிங்கடன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், நாங்கள் இருவரும் சுமார் 5 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவருடைய கணக்குகளை மேற்பார்வையிட மற்றும் அவருக்கு ஆர்டர்களை பெற்று தந்துள்ளேன். இதற்காக அவர் எனக்கு தனக்கு வரும் பணத்தில் 10 சதவீதத்தை கொடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.

நான் அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். எனது முன்னாள் முதலாளியான அவர் மீது வழக்கு போடுக்கும் நிலைக்கு நான் வந்திருப்பதை நினைத்து வருந்துகிறேன். அவரிடம் இருந்து எனக்கு ரூ. 220 கோடியை வாங்கி தாருங்கள் என அதில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X