கணவரை விவாகரத்துக்கு துரத்திய ஆஸ்கர் நடிகையின் நாய் காதல்!

இதனைத் தெரிவித்திருப்பவர் ஜேம்ஸின் முன்னாள் காதலியான மிச்செலே பாம்ப்ஷல் மெக்ஜீ.
சான்ட்ரா புல்லக் 9 நாய்களை வளர்த்து வருகிறார். இந்த நாய்கள் மீது அவருக்கு அலாதி பிரியம், ஒவ்வொரு நாள் இரவும் இந்த நாய்களுடன்தான் அவர் தூங்குவார்.
இதனால்தான் மனம் வெறுத்துப் போன அவரது கணவர் ஜெஸ்ஸி ஜேம்ஸ் விவாகரத்து பெற்றுக் கொண்டார் என மெக்ஜீ கூறியுள்ளார்.
"சான்ட்ராவை நினைத்தால் உண்மையிலேயே கவலையாக உள்ளது. 9 நாய்களுடன் படுக்கையில் தூங்குவது உண்மையிலேயே நினைத்துப் பார்க்க முடியாதது..." என்று கூறியுள்ளா மெக் ஜீ.
அதே நேரம் ஜேம்ஸுடனான தனது 11 மாத உறவையும் முறித்துக் கொண்டுள்ளார் மெக்ஜீ.
"செக்ஸுக்காகத்தான் நான் ஜேம்ஸுடன் சேர்ந்திருந்தேன். 11 மாதங்கள் சேர்ந்திருந்ததே பெரிய விஷயம். போரடிச்சுப் போச்சு. அதான் பிரிஞ்சிட்டேன். பசிச்சா சாப்பிடணும் என்கிற ரகம் நான். அவரோ, பறக்காதே, பொறுமையா இரு. டைம் கொடு" என்று கேட்கிற ரகம். செட் ஆகலே," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











