Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நிறைய குழந்தைகள் வேண்டும்..பிரிட்னி
கணவரை விட்டுப் பிரிந்து விட்டார் பிரிட்னி. அவரது இரு மகன்களான ஜெய்டன் ஜேம்ஸ் மற்றும் சீன் பிரெட்சனை வளர்க்கும் உரிமையையும் அவர் கணவரிடம் இழந்து விட்டார்.
இதனால் விரக்தியில் இருந்து வந்த பிரிட்னி தற்போது அதிலிருந்து மீண்டு புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் திருமணம் செய்யும் ஆசை பிரிட்னிக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மீண்டும் எனக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கூடவே யாருமே வர முடியாத ஒரு தீவில் கணவர், குழந்தைகளுடன் ஜாலியாக இருக்க வேண்டும்.
அதுதான் எனக்கு சொர்க்கம். எனது குழந்தைகள் என்னுடன் இருக்க வேண்டும். எனக்கே எனக்கான எனது கணவர், குழந்தைகளைத் தவிர வேறு யார் முகத்தையும் நான் பார்க்க கூடாது.
என்னை முழுமையாக நேசிக்கும் ஒருவருக்காக என்னை முழுமையாக கொடுக்க தயாராகி விட்டேன். என்னைச் சுற்றியே அவர் வலம் வர வேண்டும். அதுதான் எனக்கு உலகிலேயே மிக சந்தோஷமான விஷயமாக இருக்கும்.
அடுத்த வருடமே எனக்கு திருமணம் நடக்கும் என நம்புகிறேன். பிறகென்ன குழந்தைகளைப் பெற்றுத் தள்ள வேண்டியதுதான் என்கிறார் ஜாலி சிரிப்புடன் பிரிட்னி.