Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இந்தியக் குழந்தைக்கு மடோனா குறி?
பாப் அழகி மடோனாவுக்கும், அவரது கணவர் கய் ரிச்சிக்கும் மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் டேவிட் பாண்டா என்ற குழந்தையை கடந்த 2006ம் ஆண்டு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டிலிருந்து தத்தெடுத்தார் மடோனா.
இதையடுத்து மேலும் ஒரு ஆப்பிரிக்க குழந்தையை தத்தெடுக்க தீர்மானித்திருந்தார் மடோனா. ஆனால் மலாவி குழந்தையை தத்தெடுத்தபோதே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் மடோனா.
தனது செல்வாக்கைப் பயன்படுத்தி விதிமுறைகளை புறந்தள்ளி மடோனா டேவிட்டை தத்தெடுத்ததாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து தனது 2வது ஆப்பிரிக்க தத்தெடுப்பு முயற்சியை இப்போது மடோனா கைவிட்டு விட்டார். அதற்குப் பதிலாக அவரது கவனம் இப்போது இந்தியா பக்கம் திரும்பியுள்ளது.
இந்தியப் பெண் குழந்தை ஒருவரை தத்தெடுக்க மடோனா தீர்மானித்துள்ளாராம். இதுதொடர்பாக லண்டனைச் சேர்ந்த தனது நண்பரும், பாலிவுட் நடன இயக்குநருமான சந்தீப் சொபர்க்கருடன் விவாதித்துள்ளாராம் மடோனா.
சமீபத்தில் கய் ரிச்சியுடன், மடோனா இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். அதன் பின்னர்தான் அவருக்கு இந்தியக் குழந்தையை தத்தெடுக்கும் எண்ணம் வந்ததாம். முதலில் இதை கய் ஏற்றுக் கொள்ளவில்லை. எதற்கு இன்னொரு தத்துக் குழந்தை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அவரை பேசி சமாதானப்படுத்தி விட்டாராம் மடோனா.
தற்போது ஹார்ட் கேன்டி என்ற ஆல்பத்தில் பிசியாக உள்ளார் மடோனா. அதை முடித்த பின்னர் அவர் இந்தியாவுக்கு வருவார், இந்தியக் குழந்தையை தத்தெடுக்கும் வேலையில் இறங்குவார் என்று கூறப்படுகிறது.