Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாத்திமா புட்டோ-குளூனி காதல்!
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பெனாசிர் பூட்டோவின் தம்பி முர்டஸா பூட்டோ. முன்பு பெனாசிர் ஆட்சியில் இருந்தபோது முர்டஸா, சந்தேகத்திற்கிடமான முறையில் கொல்லப்பட்டார். இவரைக் கொன்றது பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரிதான் என அப்போது பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு ஒரு பின்னணிக் கதையும் உண்டு.
தந்தை ஜுல்பிகர் அலி பூட்டோவின் லட்சியங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியோடு இருந்தவர் முர்டஸா பூட்டோ. இதற்காக தனது சகோதரியுடன் இணைந்து தீவிரமாக கட்சிப் பணியாற்றி வந்தார்.
ஆனால் அவரது செல்வாக்கு வளருவதை விரும்பாத ஆசிப் அலி சர்தாரி, முர்டஸாவின் பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக முர்டஸாவுக்கும், சர்தாரி, பெனாசிருக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்தன.
ஒரு முறை பிரச்சினைகளைத் தீர்க்க சர்தாரியை தனது வீட்டுக்கு பேச்சுக்கு அழைத்திருந்தார் முர்டஸா. சர்தாரியும் போனார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை பெரும் சண்டையில் முடிந்து விட்டது.
இந்த சண்டையின்போது சர்தாரியின் மீசையை (அப்போது அட்டகாசமான முறுக்கு மீசை வைத்திருந்தார் சர்தாரி) பிடித்து இழுத்ததில் பாதி மீசை கையோடு வந்து விட்டதாம். அதன் பின்னர்தான் முர்டஸா மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
கட். முர்டஸாவின் மகள்தான் பாத்திமா. கவிஞரான இவர், பெனாசிரையும், அவரது அரசியல் பாணியையும் கடுமையாக சாடிவந்தவர். இப்போது சர்தாரியின் அரசியலையும் கடுமையாக சாடி வருகிறார்.
இந்த நிலையில் பாத்திமாவுக்கும், குளூனிக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளதாம். இமெயில், போன் அழைப்புகள் மூலம் இந்த நட்பு வலுப்பட்டு வருகிறதாம்.
இந்த நிலையில்தான் ஹாலிவுட்டுக்கு வருமாறு பாத்திமாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் குளூனி. இந்த வருகையின்போது தங்களது நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகவும் குளூனி, பாத்திமாவிடம் தெரிவித்துள்ளாராம்.
இந்த அழைப்பை இதுவரை பாத்திமா நிராகரிக்கவில்லை. ஆனால் ஏற்கவும் இல்லை. கிடப்பில் போட்டு வைத்துள்ளாராம்.
குளூனியின் நட்பை பாத்திமா விரும்புகிறார். அதேசமயம், அடுத்த கட்டம் என்று போவதற்கு அவர் தயங்குகிறார். அதற்குக் காரணம் வயது வித்தியாசம். குளூனிக்கு இப்போது 47 வயதாகிறது. பாத்திமாவுக்கோ 26 வயதுதான். இதனால்தான் அவர் தயக்கம் காட்டுகிறார்.
நட்புக்கு வயது வித்தியாசம் பிரச்சினை இல்லை. ஆனால் காதல், கல்யாணம் என்ற கட்டத்துக்குப் போகும்போது அது குறித்தும் யோசிக்க வேண்டியிருப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளாராம் பாத்திமா.
ஆனால் பாத்திமா மீதான தனது காதலை மறைக்க விரும்பாமல் வெளிப்படையாகவே அவரிடம் கூறியுள்ளாராம் குளூனி. மேலும் அதில் தான் சீரியஸாக இருப்பதாகவும் தெரிவித்து விட்டாராம்.
பாத்திமாவின் புத்திசாலித்தனம், அழகு, தனித்துவம் தன்னை வெகுவாக கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளாராம் குளூனி.
இன்னும் வெளிப்படையாக, வெளி உலகுக்கு பாத்திமாவுடனான தனது காதல் குறித்து குளூனி கூறாவிட்டாலும் தனது நட்பு வட்டாரத்தில் பாத்திமா பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறாராம்.
கடந்த ஆண்டுதான் பாத்திமாவும், குளூனியும் முதல் முறையாக நேரில் சந்தித்தனர். சர்வதேச மாநாடு ஒன்றில்தான் இந்த சந்திப்பு நடந்தது. பார்த்த மாத்திரத்திலேயே பாத்திமா மீது காதல் கொண்டு விட்டாராம் குளூனி.
முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமீமா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கானை காதலித்தார், மணந்தார். பின்னர் விவாகரத்தும் செய்தார். இப்போது பாகிஸ்தானைத் தேடி அமெரிக்க குளூனி வருகிறார்.
பாகிஸ்தானின் ஹாட் பேச்சு இப்போது இதுதான்.