Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
படமான மடோனா!
பாப் உலகின் அசைக்க முடியாத அரசியாக இருப்பவர் மடோனா. பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்பட பலர் இந்த களத்தில் கலகலக்க வைத்துக் கொண்டிருந்தாலும், மடோனாவின் இடத்தை யாரும் இன்னும் பிடிக்கவில்லை.
தற்போது மடோனாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது வீட்டுத் தோட்டக்காரரான நாதன் ரிஸ்மேன் டாக்குமென்டரி படமாக எடுத்துள்ளார். ஐ அம் பிகாஸ் வி ஆர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தைப் பார்த்த மடோனா, நாதன் சிறப்பாக படமெடுத்துள்ளதாக பாராட்டியுள்ளார்.
பிரில்லியன்ட் என்பதுதான் நாதனின் படத்தைப் பார்த்து மடோனா பாராட்டிய முதல் வார்த்தை. தொடர்ந்து அவர் கூறுகையில், ரிஸ்மேன் எனது தோட்டக்காரர். அருமையாக இயக்கியுள்ளார். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த அற்புதமான மனிதர்களுள் ரிஸ்மேனும் ஒருவர். சிறப்பாக செய்துள்ளார்.
தோட்டக்காரராக மட்டுமல்லாமல் எனது குழந்தைகளையும் அவர் நன்றாகப் பார்த்துக் கொள்வார். அவரிடம் மனிதாபிமானம் நிறைய இருக்கிறது. யாருக்குமே அவரைப் பிடித்துப் போய் விடும்.
இந்தப் படத்தைக் கூட எனது குழந்தைகளுக்காகத்தான் அவர் உருவாக்கியுள்ளார். அதை எனக்கும் அனுப்பி வைத்தார். சும்மா சொல்லக் கூடாது, சூப்பராகவே இயக்கியுள்ளார் என்று பாராட்டித் தள்ளியுள்ளார் மடோனா.
எனது புகைப்படத் தொகுப்புகளை ஒருமுறை என்னிடம் அவர் காட்டியபோது இதையெல்லாம் டாக்குமென்டரியாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். பிறகு அவரைப் பார்த்து ஏன் நீங்களே இதை செய்யக் கூடாது என்று கேட்டேன். அவரும் சட்டென்று சரி என்றார். இப்போது அந்த டாக்குமென்டரியும் உருவாகி விட்டது என்கிறார் மடோனா.
ரிஸ்மேன், வெறும் தோட்டக்காரராக இல்லாமல், 'பூந்தோட்டக் காவல்காரராகவும்' இருந்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.