Don't Miss!
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆழ்கடலில் உருவாகும் அவதார் தொடர்ச்சி: கேமரூனின் புதிய முயற்சி
இயக்கத்தில் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கும் அவர் படப்பிடி்ப்பு நடத்தவிருக்கும் இடம் ஆழ் கடல் ஆகும். இதற்காக பல கோடி ரூபாய் செலவில் அதி நவீன நீர் மூழகிக் கப்பல் ஒன்றை வாங்குகிறார். இந்த கப்பல் ஆஸ்திரேலியாவில் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இது கடலுக்கு அடியில் 10, 972 மீட்டர் சென்று மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழியின் அடிவாரத்திற்குச் செல்லவிருக்கிறது.
இது குறித்து கேமரூன் கூறியதாவது,
கடலுக்குள் செல்ல கப்பல் ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் நடக்கும் கப்பல் கட்டும் வேலை பாதி முடிவடைந்துவிட்டது என்று அவர் கூறினார்.
இரு இருக்கைகள், வெப்பமூட்டும் கருவி, 3 டி கேமரா ஆகியவை அந்த கப்பலில் இருக்கும்.
கேமரூனுக்கு ஆழ்கடலுக்குச் செல்லும் ஆசை பல வருடங்களாக உள்ளது. இந்த ஆண்டே தனது கடல் பயணத்தை மேற்கொள்கிறார். அவரின் இந்த முயற்சி வெற்றி அடைந்தால் மரியானா அகழிக்குச் செல்லும் இரண்டாவது அணி இவர்கள் தான்.
1960-ம் ஆண்டு விஞ்ஞானி ஒருவரும், கடற்படை லெப்டினன்ட் ஒருவரும் மரியானா அகழிக்குச் சென்றனர். கடல் அடிமட்டத்தை நெருங்க அவர்களுக்கு 5 மணி நேரம் ஆனது. அவர்கள் அங்கு 20 நிமிடங்கள் தான் இருந்தனர்.
கேமரூனின் இந்த முயற்சி மூலம் மக்களுக்கு இன்னொரு புதிய அனுபவம் கிடைக்கவுள்ளது.