Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கணவருக்கு மடோனா ரூ. 450 கோடி ஜீவானம்சம்
பாப் உலகின் முடிசூடா ராணியாக திகழ்ந்து வருபவர் மடோனா. இவரது கணவர் கய் ரிச்சி. ஆனால் முதல் கணவர் அல்ல. முந்தைய கணவர் ஹாலிவுட் நடிகர் பென். அவரை விவாகரத்து செய்து விட்ட பின்னர் தனது பிட்னஸ் பயிற்சியாளர் கார்லோஸ் லியானுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.
லியோன் மூலம் ஒரு மகளைப் பெற்றார் மடோனா. பிறகு லியோனுடன் கொண்டிருந்த தொடர்பை விட்டார். பிறகு கல்யாணம் செய்து கொண்டவர்தான் ரிச்சி
8 ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்தில் வைத்து கல்யாணம் செய்து கொண்டனர் ரிச்சியும், மடோனாவும். மடோனாவை விட பத்து வயது குறைந்தவர் ரிச்சி. மடோனாவுக்கு தற்போது வயது 50.
இந்தத் தம்பதிக்கு ரோக்கா என்ற 8 வயது மகன் உள்ளான். இதுதவிர இருவரும் சேர்ந்து டேவிட் என்ற மகனை தத்து எடுத்துக் கொண்டனர்.
எட்டு வருட வாழ்க்கை கசக்கவே ரிச்சியும், மடோனாவும் விவாகரத்துக்கு முடிவு செய்தனர். கடந்த நவம்பர் 21ம் தேதி இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது.
இதையடுத்து இங்கிலாந்து குடும்ப நல சட்டத்தின்படி கணவரும், மனைவியும் சேர்ந்து சம்பாதித்த பணத்தை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன்படி தற்போது கய் ரிச்சிக்கு மடோனா ரூ. 450 கோடியை ஜீவனாம்சமாக வழங்கியுள்ளார்.
மேலும், மேற்கு இங்கிலாந்தின், ஆஷ்கோம்ப் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டையும் ரிச்சிக்கே மாற்றி விட்டார் மடோனா.
இதை மடோனாவின் செய்தித் தொடர்பாளர் லிஸ் ரோசன்பர்க் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருபபினும் இருவரின் குழந்தைகளையும் யார் வைத்துப் பராமரிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.
இங்கிலாந்து சினிமா வரலாற்றிலேயே அதிக அளவிலான ஜீவனாம்சத் தொகை கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் ரோசன்பர்க் கூடுதல் தகவலைத் தெரிவித்துள்ளார்.