Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரிஹர்சல் சத்தத்தால் எரிச்சல் - மடோனா மீது பக்கத்து வீட்டுக்காரர் வழக்கு
நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் மடோனாவின் வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் கரேன் ஜார்ஜ். மடோனாவின் வீட்டுக்கு நேர் எதிரே உள்ள வீடு இவருடையது.
இந்த நிலையில் நியூயார்க் மாநில சுப்ரீம் கோர்ட்டில் ஜார்ஜ் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மடோனா வசித்து வரும் 7ஏ அபார்ட்மென்ட் வீட்டில் அவரும், அவரால் அழைக்கப்படும் விருந்தினர்களும் தொடர்ந்து நடனப் பயிற்சி, பாடல் பயிற்சி என ஈடுபட்டு வருகின்றனர்.
அதிக அளவில் பாடல்களை ஒலிக்க விட்டு டான்ஸ் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். இதனால் பெரும் சத்தம் ஏற்படுகிறது. இந்த சத்தத்தால் எனது வீட்டின் சுவர்களில் அதிர்வுகள் காணப்படுகின்றன.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மடோனாவின் அபார்ட்மென்ட் உள்ள கட்டட நிர்வாகத்திடம் நான் புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
மடோனா மற்றும் குழுவினரால் ஏற்படுத்தப்படும் இந்த சத்தத்தைத் தாங்க முடியாமல் நான் அந்தக் கட்டடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஜார்ஜ்.
இசைச் சேவை, கலைச்சேவை என்பதற்காக பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொல்லை தரலாமா...?