Don't Miss!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பாலிவுட்டில் ஹீரோயினாக உருவெடுக்க வேண்டும் என துடித்தேன், முடியவில்லை-சன்னி லியோன்
தன்னை யாரும் ஆபாசப் பட நடிகை என்று அழைப்பதை அவர் வெறுக்கிறாராம். நடிகை என்று சொன்னால் போதாதா, அது என்ன ஆபாசப் பட நடிகை என்றும் விசனப்படுகிறார் இந்த கவர்ச்சி களேபரம்.
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் புதிதாக சேர்ந்துள்ளார் சன்னி. கவர்ச்சியிலும், ஆபாச நடிப்பிலும் இவருக்கு நிகர் இவர்தான் என்பது கனடா நாட்டில் அனைவருக்கும் தெரியும். கரேன் மல்ஹோத்ரா என்ற இயற்பெயருடைய இவரை சன்னி லியோன் என்றால்தான் யாருக்குமே அடையாளம் தெரியும்.
தன்னைப் பற்றியும், தனது இந்தியத் தொடர்புகள் குறித்தும் சன்னி லியோன் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், என்னை யாரும் ஆபாசப் பட நடிகை என்று கூறாதீர்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் இடம் பெற்றுள்ளதன் மூலம் பாலியல் தொடர்பான திரைப்படங்களுக்கும், விபச்சாரத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை இந்திய மக்கள் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.
எனக்கு ஆரம்பத்தில் பாலிவுட்டில் பெரிய ஹீரோயினாக வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. இங்கு வந்து நிறையப் படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன்.
நான் நர்ஸ் படிப்பில் இருந்தபோதே போர்ன் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் எனக்குள் ஹீரோயினாக ஆக வேண்டும் என்பதே வெறியாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. எனக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று இதை ஏற்றுக் கொண்டேன். இதற்காக நான் வருத்தப்படவில்லை. அப்படி நடிக்கப் போய்த்தானே இன்று அடையாளம் கிடைத்து இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். எனவே சன்னி லியோன் என்பதற்கான அடையாளம் குறித்து எனக்கு பெருமைதான்.
எல்லாப் பெண்களையும் போலத்தான் நானும். எனக்கும் கல்யாணம் நடக்கும், நானும் குழந்தைகளைப் பெற்று அவர்களை கொஞ்சி மகிழ்வேன். மற்றவர்களிடம் அன்பாக பழக வேண்டும் என்று எனது பெற்றோர் எனக்கு கூறி வளர்த்துள்ளனர். எனவே என்னால் யாரிடமும் கோப்படத் தெரியாது.
எனக்குக் கொடுக்கப்படும் வேலையை 100 சதவீத திருப்தியுடன் முடித்துக் கொடுப்பேன். இது எனக்குள் ஒழுக்கத்தையும் ஏற்படுத்த உதவுகிறது என்றார் சன்னி.
சரி பாலிவுட்டில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்றால் இந்த ஷோவுக்கு வரும் வரை அப்படி யாரும் எனக்குப் பிடித்தவராக இல்லை. ஆனால் ஷோவுக்கு வரும் முன்பு பாடிகார்ட் படத்தைப் பார்த்தேன். உடனே சல்மான் கானைப் பிடித்து விட்டது. மிக அழகாக, கம்பீரமாக இருக்கிறார். அவரை சந்திப்பேன் என்று நம்புகிறேன். அவருடன் பணியாற்றவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார் சன்னி.
சல்மான் பத்திரம்...!