Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சிரபுஞ்சி போகும் ஜூலியா!
இந்தியாவில் நிலவி வரும் கடும் வெயில் ஜூலியாவுக்கு ஒத்துக் கொள்ளவில்லையாம். இதனால் குளிர் கொஞ்சும் சிரபுஞ்சிப் பகுதியில் மீதமுள்ள ஷூட்டிங்கை மேற்கொள்ளலாம் என ஜூலியா ஆலோசனை சொல்லியுள்ளாராம்.
ஜூலியா நடிக்கும் ஈட், பிரே, லவ் படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் நடந்து வருகிறது. இதற்காக இந்தியாவில் முகாமிட்டுள்ளார் ஜூலியா.
படத்தின் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை டெல்லி அருகே உள்ள ஆஷ்ரம் ஹரி மந்திர் என்ற இடத்தில் வைத்து படமாக்கி வருகின்றனர்.
அடுத்து சிரபுஞ்சி போகவுள்ளனராம். ஆண்டு முழுவதும் மழை பெய்யும் பகுதி சிரபுஞ்சி. இதனால் இந்தப் பகுதி எப்போதும் ஜில்லென்று காணப்படும். தற்போது டெல்லி பகுதியில் வெயில் அடித்து வருவதால் சற்றே அசவுகரியமாக உணரும் ஜூலியா, சிரபுஞ்சியில் மீதமுள்ள ஷூட்டிங்கை வைக்குமாறு ஆலோசனை கூறியுள்ளாராம்.
படத்தின் இயக்குநரும் சிரபுஞ்சியில் பெய்யும் மழைப் பின்னணியில் படப்பிடிப்பு நடத்த ஆசைப்படுகிறாராம். எனவே தற்போது டெல்லி அருகே நடந்து வரும் ஷூட்டிங் முடிந்தவுடன் அத்தனை பேரும் சிரபுஞ்சி கிளம்பிச் செல்கின்றனராம்.