Don't Miss!
- Sports டபுள் ஹாட்ரிக் எடுத்தால் தான் வென்று இருக்க முடியும்! பிட்ச் மோசம் இல்ல-நாங்க தான்!சுப்மன் கில் கலகல
- Lifestyle கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- Automobiles குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மைக்கேல் ஜாக்சனுக்கு சென்னையில் மூன்றரை டன் கிரானைட் சிலை
மூன்றரை டன் எடை கொண்ட கல்லில் 12 அடி உயர சிலையை செதுக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சந்திர சேகரன் என்பவர்.
சந்திரசேகரன் கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சொந்தமாக கிரானைட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஜாக்சன் மீது ஈடுபாடு கொண்டவரான சந்திரசேகரனுக்கு ஜாக்சனின் மரணம் பெரும் துயரைத் தந்தது. இதையடுத்து ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிரானைட்டால் ஆன சிலையை உருவாக்கியுள்ளார்.
மேலும், லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இந்த சிலை இடம் பெறும் என நம்பிக்கையுடன் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜாக்சனுக்கு ஏதாவது ஒரு வகையில் அஞ்சலி செலுத்த தீர்மானித்தோம். அதன் படி இந்த சிலையை உருவாக்கியுள்ளோம். இது முழுக்க ஒரே கல்லினால் ஆன சிலையாகும் என்றார்.
45 நாட்கள் இந்த சிலையை உருவாக்க காலம் பிடித்ததாம். 24 மணி நேரம் உழைத்து சிலையை வடித்து முடித்துள்ளனர். மிகச் சிறந்த கிரானைட் சிற்பக் கலைஞர்களைக் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர்.
இந்த சிலையை உருவாக்க 10.2 லட்சம் செலவானதாம்.
விரைவில் கலிபோர்னியாவில் உள்ள ஜாக்சனின் நெவர்லேன்ட் வேலிக்கு இந்த சிலையை தானமாக கொடுக்கப் போகிறாராம் சந்திரசேகரன்.