Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மைக்கேல் ஜாக்சனுக்கு சென்னையில் மூன்றரை டன் கிரானைட் சிலை
மூன்றரை டன் எடை கொண்ட கல்லில் 12 அடி உயர சிலையை செதுக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சந்திர சேகரன் என்பவர்.
சந்திரசேகரன் கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சொந்தமாக கிரானைட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஜாக்சன் மீது ஈடுபாடு கொண்டவரான சந்திரசேகரனுக்கு ஜாக்சனின் மரணம் பெரும் துயரைத் தந்தது. இதையடுத்து ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிரானைட்டால் ஆன சிலையை உருவாக்கியுள்ளார்.
மேலும், லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இந்த சிலை இடம் பெறும் என நம்பிக்கையுடன் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜாக்சனுக்கு ஏதாவது ஒரு வகையில் அஞ்சலி செலுத்த தீர்மானித்தோம். அதன் படி இந்த சிலையை உருவாக்கியுள்ளோம். இது முழுக்க ஒரே கல்லினால் ஆன சிலையாகும் என்றார்.
45 நாட்கள் இந்த சிலையை உருவாக்க காலம் பிடித்ததாம். 24 மணி நேரம் உழைத்து சிலையை வடித்து முடித்துள்ளனர். மிகச் சிறந்த கிரானைட் சிற்பக் கலைஞர்களைக் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர்.
இந்த சிலையை உருவாக்க 10.2 லட்சம் செலவானதாம்.
விரைவில் கலிபோர்னியாவில் உள்ள ஜாக்சனின் நெவர்லேன்ட் வேலிக்கு இந்த சிலையை தானமாக கொடுக்கப் போகிறாராம் சந்திரசேகரன்.