Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
மன்றோவுக்கு பக்கத்தில் 'சீட்' பிடித்த பாக்கியசாலி!
உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் கனவுக் கன்னி மர்லின் மன்றோ. பெரும் புகழில் இருந்தபோது, 1962ம் ஆண்டு, 36 வயதான மன்றோ லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
மன்றோவின் உடல் லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள வெஸ்ட் உட் வில்லேஜ் நினைவுப் பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
இவரது சமாதிக்கு அருகில் ஒரு இடம் இருந்தது. இந்த இடத்தை மன்றோவின் முன்னாள் கணவர் ஜோ டி மாகியோ வைத்திருந்தார். பின்னர் அதை ரிச்சர்ட் போன்சர் என்பவரிடம் விற்று விட்டார்.
23 ஆண்டுகளுக்கு முன்பு போன்சருக்கு 81 வயதான போது அவர் மரணமடைந்தார். அவரது உடல் இந்த இடத்தில் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த இடத்தை போன்சரின் மனைவி எலிஸ் போன்சர் விற்பனை செய்ய முடிவு செய்தார். பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டை வங்கியிடமிருந்து மீட்பதற்காக தனது கணவர் வைத்திருந்த இடத்தை விற்க அவர் தீர்மானித்தார். இதற்காக இபே இணையதளம் மூலம் அவர் ஏல அறிவிப்பை வெளியிட்டார்.
தொடக்க விலையாக 5 லட்சம் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டது. மன்றோ சமாதிக்கு அருகில் உள்ள இடம் என்பதால் ஏக டிமான்ட் ஏற்பட்டது. இறுதியில், 46 லட்சம் டாலருக்கு இந்த இடம் ஏலம் போயுள்ளது.
ஏலம் எடுத்தவர் யார் என்ற விவரத்தை இபே வெளியிடவில்லை.
ஏலம் போயுள்ள இடத்திற்கு அருகில்தான் பிளேபாய் நிறுவனர் ஹியூக் ஹெப்னரின் சமாதி இடம் உள்ளது.
ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள், சிட்னி ஷெல்டன் போன்ற பிரபல எழுத்தாளர்களும் இதே பகுதியில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.