Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டைவர்ஸ் செய்யும் 'அவ்வை சண்முகி'
இதுதொடர்பாக சான்பிரான்சிஸ்கா உச்சநீதிமன்றத்தில் மார்ஷா மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கும், கணவருக்கும் இடையே தீர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு கருத்து வேறுபாடுகள் அதிகரித்து விட்டதாக விவாகரத்துக்கு காரணம் கூறியுள்ளார் மார்ஷா.
ராபின் வில்லியம்ஸுக்கும், மார்ஷாவுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது 56 வயதாகும் வில்லியம்ஸ், குட்வில் ஹன்டிங் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்றவர்.
வில்லியம்ஸுக்கும், மார்ஷாவுக்கும் கல்யாணமான கதையே சுவாரஸ்யமானது. வில்லியம்ஸும், அவரது முதல் மனைவி வெலரி வெலார்டியும் சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்த நேரம் அது. அவர்களது மகன் சாசேரியைப் பார்த்துக் கொள்ள ஆள் தேடிக் கொண்டிருந்தார் வில்லியம்ஸ்.
அந்த சமயத்தில் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஆயாவாக வந்தவர்தான் மார்ஷா. அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட, முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மார்ஷாவை மணந்து கொண்டார் வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.