Don't Miss!
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கேரளாவில் புத்தாண்டு கொண்டாடும் பிரிட்னி
கேரளாவின் எழில் கொஞ்சும் குமரகோம் பகுதியில் சொகுசு படகு இல்லத்தில் இரு இரவுகளைக் கழித்து புத்தாண்டை கொண்டாடுகிறார் பிரிட்னி.
இதுகுறித்து பிரிட்னி தரப்பில் கூறுகையில், பிரிட்னிக்கு இந்தியாவைப் பிடிக்கும். கேரளா மீது தற்போது அவருக்குப் புதுக் காதல் பிறந்துள்ளது. தனது நண்பர் ஒருவருடன் பிரிட்னி கேரளா வருகிறார். புத்தாண்டை அவர் குமரகோம் படகு இல்லத்தில் இருந்தபடி வரவேற்று கொண்டாடவுள்ளார் என்றார்.
இருப்பினும் பிரிட்னியின் கேரள சுற்றுப்பயணம் குறித்த பிற தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எந்தவித பப்ளிசிட்டி வெளிச்சமும் தன் மீது பட்டு விடக் கூடாது என்று படு கவனமாக இருக்கிறாராம் பிரிட்னி. மிகவும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் புத்தாண்டைக் கொண்டாட அவர் விரும்புகிறாராம்.
புத்தாண்டைக் கொண்டாடி முடித்தவுடன் கேரளாவின் எழில் கொஞ்சும் சில பகுதிகளில் தனது புதிய ஆல்பத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்கிறார் பிரிட்னி. இந்தப் புதிய ஆல்பத்தில் கேரளாவின் கதகளி நடனமும், கோவில் யானைகளும் இடம் பெறவுள்ளதாம்.