Don't Miss!
- Sports
இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாக். முடிவே எடுக்காமல் திரும்பி வந்த ஜெய்ஷா.. என்ன நடந்தது
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அந்த இடத்தில் மதுபாட்டிலை திணித்தார்.. ஜானி டெப் மோசமாக பாலியல் கொடுமை கொடுத்ததாக மாஜி மனைவி புகார்
லாஸ் ஏஞ்சல்ஸ்: தனது பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து ஜானி டெப் கொடுமை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் மாஜி மனைவி ஆம்பர் ஹெர்ட்.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப்.
ஆக்வாமென் படத்தின் ஹீரோயினான ஆம்பர் ஹெர்ட்டை இரண்டாவதாக ஜானி டெப் திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
காலேஜ் படிக்கும்போது ரெடின் கிங்ஸ்லி தான் எனக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தார்!

கேப்டன் ஜாக்ஸ்பேரோ
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமானவர் ஜானி டெப். ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய ஜானி டெப்புக்கும் அவரது இரண்டாவது மனைவியான நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும் நடக்கும் சட்டப் போராட்டம் ஜானி டெப் வாழ்க்கையில் பெரும் புயலை கிளப்பியது.

இரண்டாவது மனைவி
கடந்த 1983ம் ஆண்டு அன்னி அல்லிசன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கை முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. பின்னர், அக்வாமேன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள அம்பெர் ஹெர்ட் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்த ஜானி டெப், 2017ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

350 கோடி வழக்கு
பிரபல ஹாலிவுட் நடிகையான அம்பெர் ஹெர்ட், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தனது விரலை துண்டித்ததாகவும், இதற்கு நஷ்ட ஈடாக அவர் 350 கோடி ரூபாய் தனக்கு தர வேண்டும் என பல ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறார். தற்போது அந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்து இருக்கிறது.

சிறுநீர் அளவுக்கு மோசமானது
ஜானி டெப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நீதிமன்றத்தில் சிறுநீரால் தனது பெயரை ஜானி டெப் எழுதினார் என்ற படு கேவலமான குற்றச்சாட்டு ஒன்றையும் நடிகை அம்பெர் முன் வைத்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லிக் கொண்டே நீதிமன்றத்தை குழப்பி வருகின்றனர்.

பிறப்புறுப்பில் பாட்டிலை வைத்து
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது, தனது பிறப்புறுப்பில் மதுபான பாட்டிலை சொருகி பாலியல் ரீதியாக கடுமையான டார்ச்சர் கொடுத்தார் ஜானி டெப் என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ஆம்பர் ஹெர்ட். மேலும், அதன் காரணமாக தனது பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றதாகவும் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார்.

மோசமானவர்
மற்றவர்களை போல நானும் ஜானி டெப் நல்லவர் என நம்பித் தான் திருமணம் செய்தேன். ஆனால், குடி போதையில் அவர் கொடுக்கும் டார்ச்சர்கள் பிடிக்காமல் போனதால் தான் விவாகரத்து முடிவுக்கே வந்துள்ளேன் என ஆம்பர் ஹெர்ட் கூறியுள்ளார். பல வருடங்களாக இந்த வழக்கு நடந்து கொண்டே வருகிறது. எப்போது தான் தீர்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நடிகர் ஜானி டெப்பை பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் உள்ளிட்ட பல படங்களில் இருந்தும் ஹாலிவுட் வட்டாரம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.