Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீண்டும் "தாயாக" தயாராகிறார் ஏஞ்சலீனா...!
லண்டன்: பிரபல ஹாலிவுட் ஜோடியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் இருவரும், தற்போது நான்காவது குழந்தையை சிரியாவில் இருந்து தத்தெடுத்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் ஜோடிக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஒரு குழந்தை பெற்றெடுத்தது. மற்ற 3 குழந்தைகள் கம்போடியா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் இருந்து தத்தெடுக்கப்பட்டவை ஆகும்.
இந்நிலையில், அகதிகளுக்கான ஐ.நா-வின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்ட ஏஞ்சலினா, உள்நாட்டு போரில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு பலமுறை பயணம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு போரினால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளைப் பார்த்து மனம் வருந்தினார் ஏஞ்சலினா. அக்குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் தன்னாலான உதவியை செய்ய நினைத்தார். அதன்படி, தற்போது சிரியாவைச் சேர்ந்த பெண் குழந்தையை தனது 7வது குழந்தையாக தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தகவலை ஏஜ்சலினா - பிராட் பிட் ஜோடியின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
புற்று நோய் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவாமல் தடுக்க தனது இரண்டு மார்பகங்களையும் அகற்றிவிட்ட ஏஞ்சலினா, இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள போவது இல்லை எனவும் முன்பே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.