Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மீண்டும் "தாயாக" தயாராகிறார் ஏஞ்சலீனா...!
லண்டன்: பிரபல ஹாலிவுட் ஜோடியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் இருவரும், தற்போது நான்காவது குழந்தையை சிரியாவில் இருந்து தத்தெடுத்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் ஜோடிக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஒரு குழந்தை பெற்றெடுத்தது. மற்ற 3 குழந்தைகள் கம்போடியா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் இருந்து தத்தெடுக்கப்பட்டவை ஆகும்.
இந்நிலையில், அகதிகளுக்கான ஐ.நா-வின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்ட ஏஞ்சலினா, உள்நாட்டு போரில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு பலமுறை பயணம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு போரினால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளைப் பார்த்து மனம் வருந்தினார் ஏஞ்சலினா. அக்குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் தன்னாலான உதவியை செய்ய நினைத்தார். அதன்படி, தற்போது சிரியாவைச் சேர்ந்த பெண் குழந்தையை தனது 7வது குழந்தையாக தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தகவலை ஏஜ்சலினா - பிராட் பிட் ஜோடியின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
புற்று நோய் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவாமல் தடுக்க தனது இரண்டு மார்பகங்களையும் அகற்றிவிட்ட ஏஞ்சலினா, இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள போவது இல்லை எனவும் முன்பே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.