Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் "தாயாக" தயாராகிறார் ஏஞ்சலீனா...!
லண்டன்: பிரபல ஹாலிவுட் ஜோடியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் இருவரும், தற்போது நான்காவது குழந்தையை சிரியாவில் இருந்து தத்தெடுத்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் ஜோடிக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஒரு குழந்தை பெற்றெடுத்தது. மற்ற 3 குழந்தைகள் கம்போடியா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் இருந்து தத்தெடுக்கப்பட்டவை ஆகும்.
இந்நிலையில், அகதிகளுக்கான ஐ.நா-வின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்ட ஏஞ்சலினா, உள்நாட்டு போரில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு பலமுறை பயணம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு போரினால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளைப் பார்த்து மனம் வருந்தினார் ஏஞ்சலினா. அக்குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் தன்னாலான உதவியை செய்ய நினைத்தார். அதன்படி, தற்போது சிரியாவைச் சேர்ந்த பெண் குழந்தையை தனது 7வது குழந்தையாக தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தகவலை ஏஜ்சலினா - பிராட் பிட் ஜோடியின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
புற்று நோய் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவாமல் தடுக்க தனது இரண்டு மார்பகங்களையும் அகற்றிவிட்ட ஏஞ்சலினா, இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள போவது இல்லை எனவும் முன்பே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.