Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மீண்டும் போர் கதையை இயக்கும் ஏஞ்சலினா ஜூலி
நியூயார்க்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி மீண்டும் போர் சம்பந்தப்பட்ட கதையை படமாக்கி வருகிறார்.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி நடிப்பு தவிர அவரின் சமூக சேவைக்கும் பெயர் பெற்றவர். அவருக்கு வாழ்நாள் முழுவதும் நடிகையாக மட்டும் இருக்க விருப்பமில்லை. இயக்குனர் ஆனால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது.
எடு பேப்பர், பேனாவை எழுது கதையை என்று ஒரு கதையை எழுதினார்.
ஆவணப்படம்
எ பிளேஸ் இன் டைம் என்ற ஆவணப் படத்தை எடுத்து அதை கடந்த 2007ம் ஆண்டில் வெளியிட்டார்.
முதல் படம்
ஆவணப்படம் எடுத்ததோடு அவரது இயக்குனர் ஆசை தீர்ந்துவிடவில்லை. இதையடுத்து பெட்டி நிறைய பணத்தை எடுத்தார், மூளையை கசக்கி ஒரு கதையை எழுதினார்.
இன் தி லேண்ட் ஆப் பிளட் அன்ட் ஹனி
இன் தி லேண்ட் ஆப் பிளட் அன்ட் ஹனி என்ற படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்டார் ஜூலி. போஸ்னியா போர் பின்னணியில் அழகிய காதல் கதை தான் இந்த படம்.
அன்புரோக்கன்
தற்போது ஜூலி மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இரண்டாம் உலகப் போரின்போது நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் தான்அன்புரோக்கன்.
நடிப்பு
இத்தனை ஆண்டுகளாக கேமராவுக்கு முன்பு மேக்கப்போட்டு நடித்த ஜூலிக்கு தற்போது கேமராவுக்கு பின்னால் இருக்க மட்டுமே பிடிக்கிறது. இதனால் நடிப்புக்கு டாட்டா பை பை காட்டும் திட்டம் கூட அவருக்கு உள்ளது.