கேன்சரில் இருந்து தப்பிக்க மார்பகங்களை ஆபரேஷன் மூலம் அகற்றிய நடிகை ஏஞ்சலினா ஜூலி
நியூயார்க்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி அறுவை சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை அகற்றியுள்ளார்.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி அவரது நடிப்பு தவிர பெரிய உதடுகளுக்கு பெயர் போனவர். அவர் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் திருமணமாகமலேயே சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு தத்துப் பிள்ளைகள் 3 பேரும், அவர்கள் பெற்ற குழந்தைகள் 3 பேரும் உள்ளனர்.
குழந்தைகளின் வலிறுத்தலால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஜூலிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

கர்பப்பை புற்றுநோயால் இறந்த ஜூலியின் தாய்
ஏஞ்சலினா ஜூலியின் தாய் மார்ஷலின் பெர்ட்ரான்ட் தனது 56வது வயதில் கர்பப்பை புற்றுநோயால் மரணம் அடைந்தார்.

ஜூலிக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு
ஜூலிக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட 87 சதவீத வாய்ப்பும், கர்பப்பை புற்றுநோய் ஏற்பட 50 சதவீத வாய்ப்பும் உள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

மார்பகங்களை அகற்றிய ஜூலி
புற்றுநோயைத் தடுக்க ஜூலி கலிபோர்னியாவில் உள்ள பிங்க் லோட்டஸ் பிரஸ்ட் சென்டரில் அறுவை சிகிச்சை மூலம் மார்பகங்களை அகற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications











