Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எழுத்தாளருடன் நிக்கோல் காதலர் சமரசம்!
பிளேபாய் இதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து பிரபலமான மறைந்த நடிகை, மாடலிங் அழகியான அன்னா நிக்கோல் ஸ்மித்தின் காதலரும், வக்கீலுமான ஹோவர்ட் ஸ்டெர்ன், தன்னைப் பற்றி அவதூறாக எழுதிய புத்தகத்தின் ஆசிரியர் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் பெரும் பணம் பெற்றுக் கொண்டு சமரசமாகி விட்டாராம்.
கவர்ச்சி தாரகையாக வலம் வந்தவர் அன்னா நிக்கோல். இவரது உண்மையான பெயர் விக்கி லின் மார்ஷல். கடந்த 2007ம் ஆண்டு இவர் மரணமடைந்தார். அதிக அளவில் மருந்து சாப்பிட்டதால்தான் உயிரிழந்ததாக அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில், அன்னா நிக்கோலின் மரணத்தை அடிப்படையாக வைத்து டிவி செய்தியாளரும், எழுத்தாளருமான ரீட்டா காஸ்பி ஒரு நூலை எழுதினார். இந்த நூலை ஹேச்சட் புக் குழுமம் வெளியிட்டது.
இந்த நிலையில், இதில், தன்னைப் பற்றி அவதூறாக எழுதியிருப்பதாகவும், அன்னா நிக்கோல், தனக்கு இடையிலான செக்ஸ் உறவு குறித்து தவறாக கூறப்பட்டிரு்ப்பதாகவும் கூறி புத்தக நிறுவனம் மற்றும் காஸ்பி மீது ஹோவர்ட் அவதூறு வழக்கு போட்டார். 60 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரியிருந்தார்.
இந்த நிலையில் கோர்ட்டுக்கு வெளியில் வைத்து ஹோவர்டுக்கும், காஸ்பிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாகவும், இதற்காக பெரும் பணம் கைமாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அன்னா நிக்கோல் மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக ஹோவர்ட், அவருடைய உதவியாளராகளான டாக்டர்கள் கிறிஸ்டைன் எரெஷெவிச், இந்தியரான டாக்டர் சந்தீப் கபூர் ஆகியோர் மீது திட்டமிட்டு மருந்துகளை அதிக அளவில் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எப்போதும் சியர் லீடராக இருப்பேன்.. சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அதிதி
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!