Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எழுத்தாளருடன் நிக்கோல் காதலர் சமரசம்!
பிளேபாய் இதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து பிரபலமான மறைந்த நடிகை, மாடலிங் அழகியான அன்னா நிக்கோல் ஸ்மித்தின் காதலரும், வக்கீலுமான ஹோவர்ட் ஸ்டெர்ன், தன்னைப் பற்றி அவதூறாக எழுதிய புத்தகத்தின் ஆசிரியர் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் பெரும் பணம் பெற்றுக் கொண்டு சமரசமாகி விட்டாராம்.
கவர்ச்சி தாரகையாக வலம் வந்தவர் அன்னா நிக்கோல். இவரது உண்மையான பெயர் விக்கி லின் மார்ஷல். கடந்த 2007ம் ஆண்டு இவர் மரணமடைந்தார். அதிக அளவில் மருந்து சாப்பிட்டதால்தான் உயிரிழந்ததாக அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில், அன்னா நிக்கோலின் மரணத்தை அடிப்படையாக வைத்து டிவி செய்தியாளரும், எழுத்தாளருமான ரீட்டா காஸ்பி ஒரு நூலை எழுதினார். இந்த நூலை ஹேச்சட் புக் குழுமம் வெளியிட்டது.
இந்த நிலையில், இதில், தன்னைப் பற்றி அவதூறாக எழுதியிருப்பதாகவும், அன்னா நிக்கோல், தனக்கு இடையிலான செக்ஸ் உறவு குறித்து தவறாக கூறப்பட்டிரு்ப்பதாகவும் கூறி புத்தக நிறுவனம் மற்றும் காஸ்பி மீது ஹோவர்ட் அவதூறு வழக்கு போட்டார். 60 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரியிருந்தார்.
இந்த நிலையில் கோர்ட்டுக்கு வெளியில் வைத்து ஹோவர்டுக்கும், காஸ்பிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாகவும், இதற்காக பெரும் பணம் கைமாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அன்னா நிக்கோல் மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக ஹோவர்ட், அவருடைய உதவியாளராகளான டாக்டர்கள் கிறிஸ்டைன் எரெஷெவிச், இந்தியரான டாக்டர் சந்தீப் கபூர் ஆகியோர் மீது திட்டமிட்டு மருந்துகளை அதிக அளவில் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.