Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தத்துப்பிள்ளையை அடித்தாரா ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்?: விசாரிக்கும் எப்.பி.ஐ.
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தனது மகன் மேக்ஸை திட்டி தாக்கியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனது மூன்றாவது கணவர் பிராட் பிட்டிடம் இருந்து விவாகரத்து கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் அவர்களின் விவாகரத்து குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மகன்
பிராட் பிட், ஏஞ்சலினா ஜூலி தங்களின் ஆறு குழந்தைகளுடன் பிரான்ஸில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா வந்துள்ளனர். விமானத்தில் பிட்டுக்கும், மூத்த மகன் மேக்ஸுக்கும்(15) இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
பிராட் பிட்
மேக்ஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிட் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. விமானம் அமெரிக்காவில் தரையிறங்கியதும் பிட் தனி வாகனத்தில் வீட்டிற்கு சென்றாராம்.
விவாகரத்து
பிராட் பிட் மேக்ஸை அடித்ததால் தான் அந்த சம்பவம் நடந்த மறுநாளே ஜூலி விவாகரத்து கோரி விண்ணப்பித்தார் என்று கூறப்படுகிறது. மேக்ஸ் பிட், ஜூலியின் 3 தத்துப் பிள்ளைகளில் ஒருவர்.
எப்.பி.ஐ.
வியாழக்கிழமை காலை ஹாலிவுட் ஹில்ஸில் உள்ள ஜுலி-பிட் வீட்டிற்கு சென்று பிராட் பிட்டிடம் மேக்ஸை தாக்கியது பற்றி எப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஜூலி தனது குழந்தைகளுடன் மாலிபுவில் வாடகை வீட்டில் உள்ளார்.