Don't Miss!
- News நாளை மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம்! சத்யபிரத சாகு தகவல்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கத்தியால் குத்தி, பெற்ற அம்மாவைக் கொன்றாரா? ஹாலிவுட் நடிகை அதிரடி அரெஸ்ட்
சென்னை: பெற்ற அம்மாவை கத்தியால் குத்திக்கொன்றதாக, கேப்டன் அமெரிக்கா படத்தில் நடித்த நடிகை கைது செய்யப்படுள்ளார்.
கேப்டன் அமெரிக்கா- தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர் என்ற ஹாலிவுட் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர் மோலி ஃபிட்ஸ்ஜெரால்டு (38).
அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தைச் சேர்ந்த இவர், நடிகையும், தயாரிப்பாளரும் ஆவார். கேப்டன் அமெரிக்கா படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த அவர், அந்தப் படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
கே.ஜி.எஃப் அளவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்குமா அவனே ஸ்ரீமன் நாராயணா
கன்சாஸ் நகரம்
இவரது தனது அம்மா பேட்ரீஸியா ஃபிட்ஸ்ஜெரால்டுடன் கன்சாஸ் நகரத்தில் இருந்து 22 மைல் தூரத்தில் ஒலாத்தே என்ற பகுதியில் வசித்து வந்தார்.
— Olathe Police (@OlathePolice) December 31, 2019 |
உயிரிழப்பு
இந்நிலையில், பலத்த ரத்தக்காயங்களுடன் கடந்த மாதம் 20 ஆம் தேதி வீட்டில் உயிரிழந்து கிடந்தார், அம்மா பேட்ரீஸியா. அவர் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
திடீர் கைது
ஒன்றும் துப்புக்கிடைக்காத நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த மோலியை, போலீசார் திடீரென கைது செய்துள்ளனர். பெற்ற அம்மாவை, மோலியே கொன்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை
கொலைக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார், மோலி ஃபிட்ஸ்ஜெரால்டுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.