Don't Miss!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தங்களுடன் பேசுவதற்குத் துடிக்கும் டெமி மூருக்கு தடை விதிக்க மகள்கள் முடிவு?
ஹாலிவுட்டின் முன்னாள் கனவுக் கன்னி டெமி மூர் இப்போது பெரும் சோகத்தில் இருக்கிறார். அவருக்கு மொத்தம் மூன்று கணவர்கள். முதல் கணவர் பெயர் பிரெடி மூர். இவருடன் சிறிது காலம் வாழ்க்கை நடத்திய பின்னர் ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸை மணந்தார் டெமி மூர். இந்த வாழக்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
ப்ரூஸ் வில்லிஸ் மூலம் ரூமர் வில்லிஸ், ஸ்கவுட் வில்லிஸ், தலுவா வில்லிஸ் என மூன்று மகள்களைப் பெற்றெடுத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ப்ரூஸை விவாகரத்து செய்தார் டெமி. பின்னர் மூன்று வருடம் நடிகர் ஆஷ்டன் கச்சருடன் டேட்டிங் பண்ணிங் கொண்டிருந்தார். பிறகு அவரை மணந்தார். ஆனால் இதுவும் கூட வெற்றிகரமாகத் திகழவில்லை.
இதனால் மனம் நொந்த நிலையில் இருக்கும் டெமி மூர் தனது மகள்களுடன் மீண்டும் தொடர்பு வைத்துக் கொள்ள முயன்று வருகிறார். ஆனால் மகள்களோ, தாயுடன் பேசுவதை விரும்பவில்லை. இதனால் தொடர்பு கொள்ள மறுத்து வருகின்றனர்.
இருந்தாலும் விடாமல் தொலைபேசி மூலமும், எஸ்எம்எஸ் மூலமும், இமெயில் மூலமும் தனது மகள்களைத் தொடர்பு கொண்டு என்னோடு பேசுங்கள் என்று கெஞ்சி வருகிறார் டெமி மூர். ஆனாலும் மகள்கள் இறங்கி வருவதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் தங்களது தாயாரின் இந்த கெஞ்சலை தொல்லையாக கருதும் மூன்று மகள்களும், டெமி மூர் தொடர்ந்து தங்களைத் தொடர்பு கொள்ள தடை விதிக்கக் கோரி சட்டப்பூர்வமான உத்தரவைப் பெற முடிவு செய்துள்ளனராம்.
இதை அறிந்து டெமி மூர் மேலும் சோகமடைந்துள்ளாராம். மகள்களுடன் எப்படியாவது பேசி விட வேண்டும் என்று தொடர்ந்தும் முயற்சித்தபடி இருக்கிறாராம்.
பெத்த மனசாச்சே... ஹாலிவுட்டாக இருந்தாலும் பதறத்தானே செய்யும்!